Home அரசியல் தினக்குரலுக்கு வருகை தந்தார் நூருல் இஸா

தினக்குரலுக்கு வருகை தந்தார் நூருல் இஸா

546
0
SHARE
Ad

nurul-izzahகோலாலம்பூர், பிப்.21- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உதவித் தலைவருமான நூருல் இஸா அன்வார், தினக் குரல் நாளிதழ் அலுவலகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.

தினக்குரல் நாளிதழ் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன், நிர்வாக இயக்குநர் அருண்குமார் ஆதிகுமணன், ஆதிகுமணன் துணைவியார் திருமதி இந்திராவதி, தலைமை நிர்வாகி க.சிவநேசன் உள்ளிட்டோர் அவரை சிறப்பாக வரவேற்றனர்.

அவருக்கு திருமதி இந்திராவதி பொன்னாடைப் போர்த்தி  மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

#TamilSchoolmychoice

பிறகு, சமூகம், பொருளாதரம், சமூகச் சீர்கேடு, குற்றச்செயலகள், கல்வி வாய்ப்பு, ஏழ்மை, அரசியல் நடப்பு ஆகிய பொது செய்திகளை ஆசிரியர் பகுதியினரோடு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.