Home 13வது பொதுத் தேர்தல் நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்

நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்

631
0
SHARE
Ad

ecகோலாலம்பூர், பிப்.21- தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவறுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது.

இதனை மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்த தேர்தல் ஆணைய தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தேர்தல் ஆணையம் சட்டத்தைப் பின்பற்றி வந்துள்ளது என்பதால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றார்.

பெரும்பாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரிகள்தாம் தவறான வாக்காளர்களைப் பதிவு செய்திருப்பார்கள் என்று மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்கான பாரம் உள்பட எல்ல ஆதாரங்களையும் வைத்துள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் காண்பிப்போம் என்று குறிப்பிட்டதாக அந்நாளேடு தெரிவித்தது.

எனவே,  வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களைப் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யும் மோசடி வேலை நடந்துள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே  கூறியிருப்பதற்கு அவர் இவ்வாறு மறுமொழி கூறினார்.

பிகேஆர் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு  எதிராக  வழக்கு தொடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் புஸியா தெரிவித்திருந்தார்.