நைஜீரியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகள், அந்நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் காணொளிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 52 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் பேசிய அந்த அமைப்பின் தலைவன் அபூபக்கர் செகாவ், போர்னோ மாநிலத்தின் க்வோசா நகரத்தை கைப்பற்றி உள்ளதாகவும், அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி உள்ளதாக தெரிவித்துள்ளான்.
போகோஹரம் தீவிரவாதிகள் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “சமீபத்திய நாட்களில் போகோஹரம் தீவிரவாதிகள் தங்களின் திட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும் உலக நாடுகளின் உதவியுடன் நைஜீரிய இராணுவம் இந்த நிலைமையை மாற்றும்” என்று கூறியுள்ளனர்.