மத்திய உள்துறை செயலரே தொலைபேசியில் சில ஆளுநர்களை அழைத்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் இதுவரை உத்தரப்பிரதேசத்தின் பி.எல் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வினி குமார்,
மேற்கு வங்கத்தின் எம்.கே நாராயணன், கோவாவின் பிவி வான்சூ, மிசோரமின் வைக்கம் புருஷோத்தமன், மகாராஷ்டிராவின் சங்கரநாராயணன் ஆகியோர் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மிசோராம் ஆளுநராக இருந்த கமலாபெனிவால் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கேரளாவின் ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் தமது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கூறிவந்தார்.
இதனிடையே இன்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஷீலா தீட்சித். அவர் தமது ராஜினாமா கடிதத்தை அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.