முதலாவது சம்பவம் சந்திராயன் -2 விண்கலத்தின் சந்திரனை நோக்கியப் பயணம். தொழில் நுட்பம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சந்திராயன் -2 விண்கலத்தின் புறப்பாடு நாளை நிகழும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து கர்நாடக மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நிகழும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுமையிலும் அரசியல் பார்வையாளர்கள் நடப்பு முதல்வர் குமாரசாமியின், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கூட்டணி அரசாங்கம் கவிழுமா இல்லையா என்ற கேள்வியுடன் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.