“கத்தி” படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் படத்தை தீபாவளியன்று வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதால், முருகதாஸ், இப்படத்திற்காக ஓய்வு இன்றி பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், முருகதாஸுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதெனவும், இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இவர் நலமாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.