துபாயில் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகில் உள்ள சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு கடைகளை அமைத்து புராதான மற்றும் வரலாற்று பொருட்களை விற்பனை செய்வர்.
சுமார் 65 நாடுகளைச் சேர்ந்த 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இங்கு 3500-கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் என்று சுற்றுலா அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த கண்காட்சி குறித்து சுற்றுலா நிறுவனம் ஒன்று கூறியிருப்பதாவது: “பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்முகக் கலாச்சாரத்தை இந்த 6 மாத காலத்தில் காண முடியும். துபாயின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வருவாய், இந்த 6 மாத காலத்தில் உச்சத்தை அடையும்.