Home படிக்க வேண்டும் 3 பொருள்சேவை வரி – தனி நபர் வருமான வரி 3 சதவீதம் குறையும்!

பொருள்சேவை வரி – தனி நபர் வருமான வரி 3 சதவீதம் குறையும்!

510
0
SHARE
Ad

gst-in-malaysiaகோலாலம்பூர், அக்டோபர் 7 – 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும், ஜிஎஸ்டி எனப்படும் ‘பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி’ (Goods and Services Tax) மூலம், தனி நபருக்கு 3 சதவீதம் வரை வருமான வரி குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை நிதி அமைச்சர் டத்தோ சுவா தி யோங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“50,000 ரிங்கெட்டுகள் முதல் 70,000 ரிங்கெட்டுகள் வரை வருமானம் பெறுவோருக்கான தற்போதய வருமானவரி மதிப்பு 19 சதவீதமாகும். எனினும், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் பொழுது அது 16 சதவீதமாக குறைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 600 ரிங்கெட்டுகள் வரை சேமிக்க இயலும்.”

#TamilSchoolmychoice

“இதன் மூலம் 2015-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பயனை பெறுவர். அதேவேளையில், நிறுவனங்களுக்கு வருமான வரி 1 சதவீதம் அளவிற்கு குறைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும்,தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பைத் தவிர பல பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.