தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மீதமுள்ள 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
நைஜீரிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு போக்கோ ஹரம் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட்டுள்ள 219 மாணவிகளும் மீட்கப்படுவர் என்றும் அறிவித்து இருந்தது.
“கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரத்தை நான் மறந்து நெடுநாட்களாகி விட்டது. இனி அவர்கள் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன். இந்தப் போரில் பின்வாங்குவது என்பதே கிடையாது” என்றும் அவன் தெரிவித்துள்ளான்.