இரு தரப்பிலும் வர்த்தக, கலாச்சார, அரசியல் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள். வைகோ, தமிழக அரசியல் – தேசிய அரசியல் நிலை குறித்தும், ஈழத் தமிழர்கள் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி விவரித்துப் பேசினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாட்டுத் தூதுவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம், என வைகோ ஆற்றிய பிரகடன பதிவு அடங்கிய ஒளி நாடா, மலேசியா நாட்டின் பினாங்கு நகரில் நிறைவேற்றப்பட்ட பினாங்கு பிரகடனத்தின் ஆங்கிலப் பிரதியையும் அனைவருக்கும் வைகோ வழங்கினார்.