Home உலகம் ஏர் ஏசியா QZ8501 மாயம்: தொடரும் துயரங்கள்! மீண்டும் கதறல்கள்!

ஏர் ஏசியா QZ8501 மாயம்: தொடரும் துயரங்கள்! மீண்டும் கதறல்கள்!

463
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 29 – 2014 -ம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் ஏற்கனவே எம்எச்370, எம்எச்17 என இரண்டு பெரும் விமானப் பேரிடர்களை சந்தித்த மலேசியா அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் 162 பேருடன் மாயமாகிவுள்ளது. தற்போது அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அதில் பயணம் செய்த தங்களது உறவினர்களைக் காணாமல் தவிப்பவர்களின் துயரத்தை வார்த்தைகளால் கூறிவிடமுடியாது.

2014-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Air Asia 1
சுரபாயாவிலுள்ள ஜுவாண்டா விமான நிலையத்தில் சோகத்துடன் காத்திருக்கும் பயணிகளின் உறவினர்கள்…
Air Asia 2
கதறும் பயணியின் உறவினர்…
Air Asia 3
விமானத்தில் 149 பயணிகள் இந்தோனேசியர்கள்…
Air Asia 4
பயணிகளின் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கின்றனர்…
Air Asia 5
நடந்திருக்கும் விபரீதத்தை உணராத சிறுமி…
#TamilSchoolmychoice

படங்கள்: EPA