உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தது. தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்துடன் தனது இராணுவத்தின் பிடியை இறுக்கி உள்ளது.
இந்நிலையில், பெஷாவர் பள்ளி சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பள்ளியை பார்வையிட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் மற்றும், அவருடைய மனைவி ரேஹம் கான் ஆகியோர் அங்கு வருகை தந்தனர்.
“நடந்தவையே போதும். இனி எங்கள் குழந்தைகளின் ரத்தத்தில் அரசியலைக் கலக்க விடமாட்டோம்” என்று கோஷமிட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், இம்ரான் கானையும் அவரது மனைவியையும் பின்பக்க வாயில் வழியாக பள்ளிக்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.