Home உலகம் சிரியா புரட்சிப்படைக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்கா அறிவிப்பு

சிரியா புரட்சிப்படைக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்கா அறிவிப்பு

675
0
SHARE
Ad

america-flag-sliderவாஷிங்டன், மார்ச். 1- சிரியாவில் 2 வருடமாக அதிபர் ஆட்சிக்கு எதிராக புரட்சிப்படையினர் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் அதிபர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, புரட்சிப்படைக்கு நேரிடையாக உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற 60 மில்லியன் டாலர் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ரோமில் நடைபெறும், சிரியா தேசிய கூட்டணியின் அமைதி கூட்டத்தில் ஜான் கெர்ரி கலந்து கொண்டிருக்கிறார்.