விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதற்கிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்து குழுக்கள் உதவிபொருட்களுடன் சம்பவ இடத்தில் நிற்கவைக்கப்பட்டுள்ளது.
விமானம் மோதிய வாகனத்தின் ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-படம் epa