இதனையடுத்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தங்களையும் 3-வது சாட்சியாக சேர்க்க வேண்டும் , என தி.மு.க., தரப்பில் அன்பழகனும், சுப்பிரமணியசுவாமியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுகள் மீதான விசாரணை சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி , திமுக மனுவை தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் சில வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதன்படி சாமி அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு தேவையான உதவிகள் செய்யலாம். அவரது தரப்பு விசயங்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம். ஆனால் வழக்கில் ஆஜராகி வாதிட அனுமதி இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.