Home இந்தியா ஜெய்ப்பூரில் ஜப்பானிய இளம் பெண் பாலியல் பலாத்காரம்!

ஜெய்ப்பூரில் ஜப்பானிய இளம் பெண் பாலியல் பலாத்காரம்!

440
0
SHARE
Ad

M_Id_367162_Swiss_girl_rapeஜெய்ப்பூர், பிப்ரவரி 10 – வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்ட ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சுற்றுலா வழிகாட்டி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இருபது வயதான அப்பெண் ஞாயிற்றுக்கிழமையன்று சரித்திரப் புகழ் வாய்ந்த ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை அணுகிய ஆடவர் ஒருவர், தன்னை சுற்றுலா வழிகாட்டி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

பின்னர் தனது இருசக்கர வாகனத்திலேயே ஜெயப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறியதை நம்பி, அந்த இளம்பெண் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

பல இடங்களுக்குச் சென்ற பின்னர், மாலை வேளையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற ஆடவர், அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

“உள்ளூர் ஆடவர் ஒருவரால் ஜப்பானிய சுற்றுப்பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளது. அந்தப் பெண்ணை அவர் தங்கியிருந்த தங்குவிடுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அந்நபர் ஏமாற்றியுள்ளார். மேலும் தனக்கு அந்த ஆடவர் அப்பெண்ணுக்கு உணவும் வழங்கியதாகத் தெரிகிறது. அதில் போதை மருந்து கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்,” என்றார் ஜெய்ப்பூர் நகர காவல்துறை ஆணையர் தரம்சந்த்.

கடந்த மாதம் கொல்கத்தாவில் 22 வயதுடைய ஜப்பான் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததன் பேரில் ஆறு பேர் கைதாகினர். மேலும், நேற்று இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து இளம்பெண் ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வட இந்தியாவில் ஜப்பான் பெண் சீரழிக்கப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த ஆடவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.