மேலும், இவர் மலையாளத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கியதோடு, தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக விளங்கியவர்.
1928-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், 1953-ஆம் ஆண்டு ‘சண்டி ராணி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் தமிழ்ப்படங்களில் பணியாற்றியவர். பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக விளங்கிய வின்சென்ட், ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘சுமைதாங்கி’ போன்ற படங்கள் பெரிதும் பாராட்டைப்பெற்றவை.
இறுதியாக கடந்த 1997-ஆம் ஆண்டு ‘அன்னமய்யா’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின்னர் முதுமை காரணமாக திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையிலிருந்த வின்சென்ட் இன்று காலை மரணமடைந்தார். மறைந்த வின்செட்டுக்கு ஜெயனன் வின்சென்ட், அஜயன் வின்சென்ட் என்ற இரு மகன்கள் உள்ளனர்.