Home இந்தியா வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சலுகை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சலுகை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

394
0
SHARE
Ad

Parlimentபுதுடெல்லி, மார்ச் 3 – குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படாததால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவளி அட்டைதாரர்களையும், வெளிநாட்டுவாழ் இந்திய குடிமக்கள் அட்டைதாரர்களையும் ஒன்றாக இணைத்து, ஒரேவிதமான சலுகைகள் வழங்க இம்மசோதா வகைசெய்கிறது.

அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் பேசும்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிக்கேற்ப இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.