Home இந்தியா கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!

கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!

488
0
SHARE
Ad

AB-de-Villiers-of-South-Africa-is-congratulated-by-team-mates254சிட்னி, மார்ச் 18 – சிட்னியில் நடைபெற்ற கால் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஆனால், 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 45 ரன்களும் திரிமன்னே 41 ரன்களும் சேர்த்தனர். ஏடி மேத்யூஸ் 19 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே ரன்களை எடுத்தனர்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் டுமினி 3 விக்கெட்களையும், இம்ரான் தஹிர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். 134 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.

#TamilSchoolmychoice

South-Africa-vs-Sri-Lankaஅந்த அணியின் டி காக் 78 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியில் வீழ்ந்த ஒரே விக்கெட்டான அம்லாவை மலிங்கா வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியையோ, நியூசிலாந்து அணியையோ தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ளும். 4 விக்கெட்களை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹீர் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.