Home இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா – மோடி வாழ்த்து!

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா – மோடி வாழ்த்து!

427
0
SHARE
Ad

indiaமெல்போன், மார்ச் 19 – வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுத்திக்குள்  நுழைந்தது இந்தியா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதியில் இந்தியா -வங்கதேச அணிகள் மோதின.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவர்களில்  முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்து  கொடுத்தது. தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய ரோகித்சர்மா 126 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 137 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

#TamilSchoolmychoice

cricketஇறுதியில் அதிரடியாக ஆடிய  ரவிந்திர ஜடேஜா 10 பந்துகளில் 23  ரன்கள் எடுத்து 50  ஓவர்களில்  முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. கடைசியில் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய  வங்கதேசம்.

இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி  வந்தனர். இறுதியில், வங்கதேசம் 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்தது. இந்திய அணியில் யாதவ் 4, சமி, ஜடேஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த போட்டியிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்  மூலம் உலககோப்பையில் தொடர்ந்து 70 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய புதிய  சாதனையை படைத்துள்ளது.

modi_பிரதமர் மோடி வாழ்த்து:

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுத்திக்குள் நுழைந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்தார். சிறந்த அணி, சிறப்பான ஆட்டம் என்று அவர் டுவிட் செய்த தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.