Home இந்தியா தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் மனு!

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் மனு!

534
0
SHARE
Ad

Taj Mahal-Marvellous Temple of Love tourism destinationsஆக்ரா, ஏப்ரல் 11 – தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது.

இந்த தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அம் மனுவில், “1212-ஆம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் சிவன் கோவிலை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார்”.

#TamilSchoolmychoice

“அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது” எனக் கூறியுள்ளனர். இம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி,

இது குறித்து அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.