Home உலகம் ராஜபக்சேவிற்கு தெரியாமல் இலங்கை வந்த பசில் ராஜபக்சே – ஆச்சரியத்தில் ராஜபக்சே!

ராஜபக்சேவிற்கு தெரியாமல் இலங்கை வந்த பசில் ராஜபக்சே – ஆச்சரியத்தில் ராஜபக்சே!

502
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_611078740கொழும்பு, ஏப்ரல் 23 – முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சே நாடு திரும்பியது தமக்கு தெரியாது என அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, இலங்கையி உள்ள கம்பஹாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போது ஊடகவியலாளர்கள் பசில் ராஜாபக்சே இலங்கை வருகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். பசில் ராஜபக்சே நாடு திரும்பியது பற்றி உங்களது கருத்து? என ஊடகவியலாளர்கள் வினவினர்.

#TamilSchoolmychoice

ஆ …. வந்து விட்டாரா? எனக்குத் தெரியாது. அவர் கம்பஹாவில் தனது அரசியலை செய்தார். நான் எனது அரசியலை செய்தேன் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.