Home உலகம் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்

சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்

486
0
SHARE
Ad

Wigneswaran-41யாழ்பாணம், ஜூன் 1 – அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது; “ராணுவம் வடக்கு மாகாண தமிழர்களிடம் கையகப்படுத்திய வளமான பூமி தற்போது வளமற்ற நிலமாக திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை வளமான பூமியாக மாற்றி தரப்படும் என்று அரசு தெரிவித்திருந்தும் அவ்வாறு வழங்கப்படவில்லை”.

“வடக்கு மாகாணத்தில் முகாமிட்டுள்ள ராணுவம் வெளியேற வேண்டும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படவில்லை”.

#TamilSchoolmychoice

“அதனை அரசும் கண்டு கொள்ளவில்லை. மொத்தத்தில் அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை” என்றார் அவர்.