Home இந்தியா ஜெயலலிதா வழக்கை நடத்தி முடிக்க ரூ.5.12 கோடி செலவு – கர்நாடகா அரசு தகவல்!

ஜெயலலிதா வழக்கை நடத்தி முடிக்க ரூ.5.12 கோடி செலவு – கர்நாடகா அரசு தகவல்!

472
0
SHARE
Ad

jayalalitha-assets-case-imageகர்நாடகா, ஜூன் 5 – தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி முடிக்க அரசுக்கு ரூ.5.12 கோடி செலவானதாகக் கணக்கு காட்டியுள்ளது கர்நாடகா அரசு. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா இதனை தெரிவித்தார்.

இது வெறும் செலவு கணக்கு மட்டுமே என்றும், பெங்களுருவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகையை உள்துறை அமைச்சகம் கணக்கிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தத் தொகைக்கான கணக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து, அந்த தொகையை கர்நாடக அரசு பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice