Home கலை உலகம் தொடரும் ஆபாசத் தொலைபேசி அழைப்புகள்: பாதுகாப்புக் கோருகிறார் கவிஞர் தாமரை!

தொடரும் ஆபாசத் தொலைபேசி அழைப்புகள்: பாதுகாப்புக் கோருகிறார் கவிஞர் தாமரை!

625
0
SHARE
Ad

tamarai-poசென்னை, ஜூன்9- சில மாதங்களாகத் தொடர்ந்து ஆபாசத் தொலைபேசி அழைப்புகளும், மிரட்டல்களும், இணையத்தின் வழி தொந்தரவுகளும் வந்த வண்ணம் இருப்பதால், தனக்கும் தன் மகனுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி கவிஞர் தாமரை, காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுபற்றி அவருடைய  முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.

நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன்.

தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது. அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன்; என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான் இத்ற்குக் காரணம்.

இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துப்பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன். இந்த வகை ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே!

இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள்.

என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன்.” என்று அவர்  அதில் குறிப்பிட்டுள்ளார்.