வலு மற்றும் சக்தி வளங்கள் தொடர்பான கருத்தரங்கு வரும் ஜூன் 26, 27-ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்பு விருந்திராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
புதுடெல்லியில் அப்துல் கலாமை, இலங்கையின் சக்தி, மின் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 8-ஆம் தேதி சந்தித்து, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அப்துல் கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments