Home உலகம் தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு!

தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு!

516
0
SHARE
Ad

southkorea-merseசியோல், ஜூன் 18 – தென் கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் பரவி வருகிறது. அதனால் அங்கு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இன்று இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் இறந்ததால், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 160 பேர் ‘மெர்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 6,700 பேர் அவர்களின் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

health-mers-southkoreaமேலும் ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கும் மெர்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களின் நிலை கண்டறியப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான மக்களுடன் நெருங்கிப் பழகியது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.