இந்த யோகா தினவிழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன் பின்பு, விழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், “யோகா கலையின் தாய்வீடு இந்தியா”.
“இந்த மண்ணில் நூற்றாண்டுகளாக யோகா கலை கடைப்பிடிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. யோகா என்பது ஒரு கலை மற்றும் அறிவியல் என்று கூட கூறலாம். எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் அபூர்வ சக்திகளை யோகா கலை தன்னகத்தே கொண்டுள்ளது”.
மேலும், அதிபர் மாளிகை வளாகத்தில் தங்கியிருப்பவர்கள் நீண்டகாலமாக யோகா செய்து வருவது குறித்து பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த விழாவில் அதிபர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.