Home கலை உலகம் “சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா?” – நிருபர்களிடம் கமல் கேள்வி!

“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா?” – நிருபர்களிடம் கமல் கேள்வி!

1070
0
SHARE
Ad

புதுடெல்லி – மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரம் தொடர்பாக டெல்லிக்கு வருகை புரிந்த நடிகரும், அக்கட்சித் தலைவருமான கமல்ஹாசன், பணிகள் முடித்துத் திரும்புகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம் கட்சிப் பணிகள், சமூகப் பிரச்சினைகள், பிக்பாஸ் 2 உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, நடிகை கௌதமிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் சம்பள பாக்கி வைத்திருப்பது குறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த கமல், கௌதமிக்கு சம்பளம் பாக்கியைக் கொடுத்துவிட்டோம். அது குறித்து அவர் உங்களுக்குத் தகவல் சொல்லவில்லையா? என செய்தியாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.