Home வணிகம்/தொழில் நுட்பம் விஜய் மல்லையா நாடு கடத்தப்பட பிரிட்டன் அனுமதி

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட பிரிட்டன் அனுமதி

1033
0
SHARE
Ad

இலண்டன் – பொருளாதாரக் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

9 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கிகளை ஏமாற்றி ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையா, இந்த முடிவை எதிர்த்து தான் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.