SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை (3 ஆகஸ்ட்) இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த முறை வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான மதுமிதா காப்பாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த வாரம் 5 பேர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோரே அந்த ஐவராவர்.

நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், நிகழ்ச்சியின் இறுதியில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மதுமிதா காப்பாற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மற்றவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள், யார் காப்பாற்றப்படுவார்கள் என்பதை நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் தெரிவிப்பதாகக் கூறி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் கமல்ஹாசன்.