Home One Line P1 48 மணி நேரத்திற்குள் யோங் சம்பந்தப்பட்ட விசாரணையை காவல் துறை முடிக்கும்!

48 மணி நேரத்திற்குள் யோங் சம்பந்தப்பட்ட விசாரணையை காவல் துறை முடிக்கும்!

683
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை 48 மணி நேரத்திற்குள் காவல் துறை முடித்து, அதன் ஆதாரங்களை மூன்றாவது முறையாக மாநில அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும் என்று மாநில காவல் துறை தலைவர் ராசாருடின் ஹுசேன் கூறினார்.

மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பின்னர் காவல் துறை விசாரணை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அந்த நேரத்தில் மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகள் தயாராக இல்லாததால் ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை வழக்கறிஞர்களால் திருப்பி அனுப்பப்பட்டது” என்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை 8-ஆம் தேதி, யோங் தனது இந்தோனிசிய வீட்டு பணிப்பெண்ணை, தனது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆயினும், அவர் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.