Home உலகம் சுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்!

சுனாமி பேரலை தாக்கி இன்றோடு 9 ஆண்டுகள்!

992
0
SHARE
Ad

Tsunami Phuket

கோலாலம்பூர், டிசம்பர் 26- 2006 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

சுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று.

#TamilSchoolmychoice

தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.

அன்று ஒழித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. சுனாமி  தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று உலகெங்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.