சென்னை – தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாளரும், சிந்தனையாளருமான மாலனின் எண்ணத்திலும், கைவண்ணத்திலும் உருவாகியிருக்கின்றது ‘திசைகள்’ எனும் புதிய இணைய மின்னிதழ். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றது ‘திசைகள்’.
இணைய வெளியில் தமிழ் ஆர்வலர்களுக்கான ஒரு நூலக அறையாக ‘திசைகள்’ உருவாகும் என்றும் மாலன் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக ‘திசைகள்’ திகழ வேண்டும் என்பதும், அவர்களின் எழுத்துப் படிவங்கள் மற்றும் அவரவர் நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதும், பரிமாறிக் கொள்வதும் ‘திசைகளின்’ மூலமாக தான் முன்னெடுத்துச் செல்ல நினைக்கும் தனது கனவுத் திட்டம் எனவும் மாலன் கூறியிருக்கின்றார்.
முத்து நெடுமாறனின் வாழ்த்தும் வரவேற்பும்
அந்த 2002ஆம் ஆண்டு காலகட்டத்தில் யூனிகோட் எனப்படும் அனைத்துலக அளவில் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் பொதுப் பயன்பாட்டிற்கு வெளிவரத் தொடங்கின. தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வெளிவந்த முதல் மின்னிதழ் ‘திசைகள்’ என்பதையும் முத்து நெடுமாறன் நினைவுபடுத்தினார்
“திசைகள்” புதிய வடிவமைப்புடனும், புதிய உள்ளடக்க அம்சங்களுடன் உருவாகி மீண்டும் வெளிவருவதை வரவேற்பதாகவும், மின்னியல் உலகில் வெற்றி முத்திரை பதிக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.