அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான துப்பாக்கிச் சூடாக இது கருதப்படுகின்றது.
இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலை நடத்தியவன் 64 வயதான ஸ்டீபன் பாடோக் என்பதும், இசைத்திருவிழா நடந்த அரங்கின் அருகே அமைந்திருந்த தங்கும்விடுதி ஒன்றில் 32-வது மாடியில் உள்ள அறை ஒன்றில் இருந்து அவன் இத்தாக்குதலை நடத்தியிருக்கிறான் என்பதும் தெரியவந்திருக்கிறது.
மேலும், 1,000 அடி தூரத்தில் இருந்து சுடும் அளவிற்கு அவன் பயன்படுத்தியது முற்றிலும் இயந்திரத் துப்பாக்கியாக இருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக தூரத்தில் இருந்து சுடும் அளவிற்கு மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்று அமெரிக்க காவல்துறைக் கண்டறிந்திருக்கிறது.