நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) புத்ரா ஜெயாவில் விஸ்மா புத்ராவில் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவைச் சந்தித்தார். அப்போது, அல் ஜூபிர் இந்தத் தகவலை வெளியிட்டதாக சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.


ஆனால், இதே சவுதி வெளியுறவு அமைச்சர்தான் 2016-ஆம் ஆண்டில் நஜிப்புக்கு அனுப்பப்பட்ட அந்தப் பணம் சவுதி அரசாங்கத்தின் உண்மையான நன்கொடை என அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டில் தலைகீழாக மாறியிருக்கிறார்.
இதற்கிடையில் 1எம்டிபி ஊழல் மற்றும் 2.6 பில்லியன் நன்கொடை என்ற இரு விவகாரங்களிலும் மலேசிய அரசாங்கத்துக்கு சவுதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.