அரசாங்கத்தின் மொழிவாரியான திட்டங்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை, உடன்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் வண்ணம் இந்தத் தொடக்க விழா இன்று மலாய் மொழிக்கான அரசு அமைப்பான டேவான் பகாசா டான் புஸ்தாகா கட்டடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான இடத்தையும், செலவினங்களையும் கூட டேவான் பகாசா டான் புஸ்தாகா அமைப்பே ஏற்றுக் கொண்டது.
டேவான் பகாசாவின் உயர்நிலை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ்க் காப்பகத்தின் தலைவராக துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் செயல்படுவார். இதுவும் ஒரு புதுமையான நடவடிக்கையாகும். தமிழ் மொழி மீதான காப்பகம் ஒன்றிற்கு சீன துணையமைச்சர் பொறுப்பேற்றிருப்பது அனைத்து மொழிகளையும் சரிசமமாகக் கருதித் திட்டங்களை மேற்கொள்ளும் நம்பிக்கைக் கூட்டணியின் புதிய அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
காப்பகத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
துணையமைச்சரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.
தமிழ்க் காப்பகத் தொடக்க விழாவின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: