Home நாடு சண்டாக்கான்: தேர்தலுக்கான அறிகுறியே இல்லை!

சண்டாக்கான்: தேர்தலுக்கான அறிகுறியே இல்லை!

580
0
SHARE
Ad

சண்டாக்கான்: இதர இடைத் தேர்தல்களைப் போலில்லாமல் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் எந்த ஒரு ஆரவாரமுமின்றி நடந்து வருவதாக பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கையில், சாதுவான நிலையே சண்டாக்கானில் நிலவி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. குறைவான சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கொடிகளையே காண முடிகிறதென்று பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. 

சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவ உள்ளதுநம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில், ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லாசியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளதுஇரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர்அவர்களில் 270 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.