Home நாடு சிலாங்கூர்: 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

சிலாங்கூர்: 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

422
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்கள் மே 6 (வியாழக்கிழமை) முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்.

உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஆறு மாவட்டங்கள் இதில் அடங்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மீதமுள்ள மூன்று மாவட்டங்களான கோலா சிலாங்கூர், சாபாக் பெர்னாம் மற்றும் உலு சிலாங்கூர் ஆகியவை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.