கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,765,016 ஆக உயர்ந்தது.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16,942 ஆக உயர்ந்திருக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1007 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூர் 3,711 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கெடா, பினாங்கு, ஜோகூர், கிளந்தான் ஆகிய 4 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.
சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.
கோலாலம்பூர் 573 தொற்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal