திரங்கானு மாநிலத்தில் கோல பெசுட் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அந்நிலை தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதோடு, இன்னொரு விவகாரம் பற்றி அவர் கருத்துரைக்கையில், பக்காத்தானின் கறுப்பு 505 பேரணிகளுக்கு துருக்கி, வாஷிங்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உதவி பெறுவதாக குற்றம் சாட்டியதற்காக முன்னாள் இந்தோனேசிய துணைத் தலைவர் ஜுஸுப் கல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கர்பால் சிங் கூறினார்.
“ஜூஸூப் கல்லாவின் இந்த கருத்து பக்காத்தான் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை கடுமையாகப் பாதிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.