கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற ஷின்சோ அபேயும், 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதவியேற்ற பார்க் ஜியுன் ஹையும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
தென் கொரியாவும், ஜப்பானும் நீண்ட நாட்களாகவே தங்கள் நாடுகளுக்கிடையே உள்ள தீவுகளின் மீதான உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தங்களுடைய ராணுவத்தினர் இரண்டாம் உலகப் போர் நேரங்களில் பயன்படுத்திய செக்ஸ் அடிமைகளுக்கு முதன்முறையாக மன்னிப்பு கேட்பதாக ஜப்பானின் பிரதமர் உறுதியளித்த பின்னரே இந்தப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மலர்ந்துள்ளது.
அமெரிக்காவும் தங்களுடைய இரண்டு முக்கிய நட்பு நாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய ஒருங்கிணைந்து பணியாற்ற முயற்சித்து வருகின்றது.