கடந்த செவ்வாய் கிழமை, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின், கருப்பு பெட்டி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் விமான விபத்திற்கு தீவிரவாத தாக்குதல் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், விமான விபத்தில் தீவிரவாதிகளின் சதி இல்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் செய்தித்தொடர்பாளர் பெர்னாட்டி மீஹான் கூறுகையில், “விமான விபத்தில் எந்தவொரு தீவிரவாத செயல்களும் காரணமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
விபத்து நேர்வதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாகவே தீவிரவாத தாக்குதல் தொடர்பான கேள்விகள் எழுந்தன.