ACJ 320 என்ற ரக இந்த விமானத்தை ஏர் லூதர் ஏஜி என்ற நிறுவனத்திலிருந்து முதலில் ஜெட் பிரிமியர் ஒன் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் பின்னர் ஜெட் பிரிமியர் நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் இந்த விமானத்தை 465 மில்லியன் ரிங்கிட் செலுத்தி வாங்கியுள்ளது என்றும் ரபிசி குறிப்பிட்டார்.
இத்தகைய விமானம் இந்த காலகட்டத்தில் நமக்குத் தேவையா என்பது ஒருபுறமிருக்க, விமானத்தின் சந்தை விலையை விட இவ்வளவு பணம் கூடுதலாகக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்றும் ரபிசி கேள்வி எழுப்பினார்.
இந்த விமானம் வாங்கப்பட்ட விவகாரத்தை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹாரி அப்துலும் இந்த விமானம் வாங்கப்பட்டதை சாடியுள்ளார்.
மக்கள் விலையேற்றங்களால் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கும்போது, விலையுயர்ந்த சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார்கள், அதுவும் சந்தை விலையை விட கூடுதலாகக் கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றும் ஜொஹாரி கூறியுள்ளார்.