இது தொடர்பாக மூசா கூறுகையில், “அபுதாபி வங்கி மற்றும் ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்பாக் வங்கியில், மெல்பெர்ன் சொத்துக்களுக்காக வாங்கிய 70 சதவீதம் கடனை, மாரா திரும்பிச் செலுத்த வேண்டும். அதற்காக மாரா, சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சிறந்த வாய்ப்புகள் அமைந்தால் வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களும் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாராவால் வாங்கப்பட்ட லண்டன் ஆஷ்லே மாளிகையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இனி மாரா, வெளிநாடுகளில் எந்தவொரு முதலீடுகளையும் ஏற்படுத்தாது” என்றும் கூறியுள்ளார்.