Home இந்தியா அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

619
0
SHARE
Ad

201507301022428329_Abdul-Kalam-s-last-journey_SECVPFராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாம் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த ஜான்சா பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகையைத் தொடர்ந்து அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சிறப்பு விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தடைந்தார்; மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்; கலாமின் நல்லுடலுக்கு இறுதி மரியாதையும் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினார்.

பின்னர், அப்துல் கலாமின் நல்லுடல் ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாகச் சென்று இறுதிச் சடங்கு நடைபெறும் பேய்க்கரும்பு மைதானத்திற்கு வந்தது.

#TamilSchoolmychoice

அப்போது சாலையின் இருபுறங்களிலும் நின்று பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய இளைஞர்கள் ‘பாரத் மாதாகி ஜெய்’ என முழக்கமிட்டனர்.