இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று ராஜபக்சேவிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “இலங்கையில் நீங்கள் அதிபராக இருந்த போது, செய்த ஜனநாயகப் படுகொலைகளை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்களை பிரதமராக்க நான் அனுமதிக்க மாட்டேன். அணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஒருவரைத் தான் பிரதமராக நியமனம் செய்வேன். அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதன் மூலம், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.