அப்துல்கலாமின் அண்ணன் மரைக்காயர், பிரதமருக்கு எழுதிய இத்தகைய கோரிக்கைக் கடிதத்துடன் மரைக்காயரின் பேரன்களான ஷேக் சலீம், ஷேக் தாவூத் மற்றும் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் டில்லியில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர்.
மேலும், கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி, நினைவு நாளான ஜூலை 27-ஆம் தேதி ஆகிய தினங்களில், அவரது நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தில் அரசு மரியாதை செலுத்தப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல், கலாமின் இறுதிச் சடங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆதரவு அளித்த மத்திய அரசுக்கு நன்றியையும் அக்கடிதத்தில் கலாம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.