அந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது, இலங்கை இராணுவ வீரர்கள் போர் குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான். இந்த போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும்.”
“மேலும், இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க தனி பிரிவு அமைக்க வேண்டும். நம்பத் தகுந்த விசாரணை நடக்க வேண்டுமானால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.