Home Featured தமிழ் நாடு சென்னையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

517
0
SHARE
Ad

proxyசென்னை – தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பரங்கிப் பேட்டை பகுதியில் இன்று அதிகபட்சமாக 16 செ.மீ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

CVH9gdVUYAIi5s7மேலும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால், அடையாறு, கூவும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காட்டாங்குளத்தூர் ஏரி உடைந்துள்ளதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. CVH9b3cUEAA8rAlஇதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களை  பாதுகாக்கவும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.